Sunday, July 31, 2016

அப்படி ஒரு நிலமை வராதா?

பொதுவாகவே அறமாக இருப்பினும் இலக்கணமாக இருப்பினும் குழந்தகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போதும் வினாத் தாள்களிலும், முதலாளிகளை புத்திக் கூர்மையானவர்களாகவும், யோக்கியர்களாகவும் வேலையாட்களை முட்டாள்களாகவும், திருடர்களாகவும் சித்தரிப்பதென்பது வழக்கமாக உள்ளது.
நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய கேள்வித் தாள்களைக் கொண்டு நடத்திக் கொண்டிருந்த போது,
"The servant was faithless to his master. He stole his watch"
என்றிருந்தது. நானதை மாற்றி,
“ The master was faithless to his servant. He stole his sweat"
என்றெழுதி நடத்தினேன். முடித்து வரும் போது ஒரு குழந்தை என்னைத் தொடர்ந்து View blogவந்தாள்,
“ என்ன சாமி?”
“ ரொம்ப தேங்க்ஸ் சார்”
“ எதுக்குடா?”
” கொஸ்டீன மாத்தி எழுதி நடத்துனதுக்கு”
“ என்னடாம்மா”
“ தெரியும் சார். இதே கொஸ்டீன பக்கத்து வீட்டு அக்கா எனக்கு நடத்துனாங்க சார்”
அவள் கண்களில் ஈரம் படர்ந்திருந்தது. வினாவை மாத்தினதுக்கே இப்படி நெகிழ்கிறாளே இந்தக் குழந்தை. சமூகமே மாறினால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு நிலமை வராதா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...