Friday, July 29, 2016

கொடுப்பின இருந்திருக்கு நேத்தெனக்கு.

நேற்றும் இன்றும் ஏழாம் வகுப்பு குழந்தைகளிடம் ஆசைதீர வறுபட்டேன்.
பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு இடைத்தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. தேர்வறைகளை பார்வையிடுவதற்காக சென்று கொண்டிருந்தேன்.
காலையில் தேர்வினை முடித்திருந்த ஏழாம் வகுப்பு குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்து படிக்கிறேன் என்ற பேரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் யுவஸ்ரீ கத்தினாள்,
“சார் இங்கன வாங்களேன்”
கிட்டக்க சென்றவன் கேட்டேன்,
“ஏண்டி பாப்பா?”
“குட் ஆஃப்டெர் நூன்”
“இதுக்குத்தான் கூப்டீங்களா பெரிய மனுஷி” என்றவாறே அவளது தலையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் செல்லமாக ஒரு கொட்டு என்று கொட்டியபடியே “குட் ஆஃப்டெர் நூன்:” என்றேன்.
தலையை பிடித்துக் கொண்டே அதைவிட செல்லமாக, “ ஸ்... வலிக்குதே” என்றாள்
”வலிக்காதே, வேணா மகாவக் கொட்டிக் கேட்போமா?”
“ வேணாம், ஒங்களையே கொட்டலாமா?”
“ சரிங்க பெரிசு, கொட்டுங்க”
“ “கொட்டுன்னுட்டு மரமாட்டமா நின்னா எப்படி கொட்டுவேன், குனிங்க மொதல்ல”
குனிந்து வாங்கினேன்.
கொடுப்பின இருந்திருக்கு நேத்தெனக்கு.
( இன்று நடந்ததை நாளை சொல்கிறேன்)

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...