இன்றையத் தேதியில் பெரும்பான்மைக் கவனம் இந்தப் படத்தின் மீதே இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அதைவிட பேருண்மையாக இருக்கும் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மை பேருக்கு இது ஏதோ ஒரு கருப்புக் காகிதத்தால் சுற்றப்பட்ட பொட்டலமாகத் தெரியும் என்ற எதார்த்தம்.
“பிறப்பொக்கும்” என்பதை ஒருபோதும் தருணால் ஏற்க இயலாது. ஏற்க இயலாது என்பதைவிட எதிரானது என்பதே சரியானது.
எதிரான ஒருவர் ஏனிப்படி அலைந்தார்?
எனக்கென்னவோ ‘உறவாடிக் கெடுத்தலின்’ ஒரு பகுதியாகவே அது படுகிறது.
சாமியார்களின் எதிர்ப்பு இந்த சிலைமீதென்பதிலும் நான் மாறுபடுகிறேன். ‘பிறப்பொக்கும்’ , ‘ முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ போன்ற சித்தாந்தங்களின் மீதான எதிர்ப்பே அவர்களது இந்த சிலை மீதான வெறுப்பு.
அடிமடியில் நெருப்பள்ளி முடிந்துகொள்ள அவர்கள் என்ன கிறுக்கர்களா?
வள்ளுவனின் நேரெதிர் சித்தாந்தம் அவர்களது. வள்ளுவத்தின் வளர்ச்சி அவர்களது இருத்தலை எதிர்த்து கலகம் செய்யும்.
அவர்கள்மிகச் சரியாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பொட்டலத்திற்குள் கிடப்பதல்ல வள்ளுவர். அவரை பொட்டலமாய் மடிப்பதற்கான காகிதத்தை யாரும் இதுவரைக்கும் தயாரிக்கவில்லை. தயாரிக்கவும் முடியாது.
விமர்சனத்தோடு வள்ளுவரை ஏற்பது அவசியம்.
வள்ளுவருக்கு மீறி யாரால் என்ன சொல்ல முடியும் என்று இறுமாந்து இருப்பது இதைவிட ஆபத்தாக முடியும்.
கவனமாய் மொழிப்படுத்துவோம், கலை இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் வள்ளுவரை ஊர் ஊராய் கொண்டு போய் சேர்ப்போம்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்