Wednesday, July 10, 2024

கவிதை 39

 

ஒரு முகவரியைத் தேடியபடி
மேற்காகப் போய்க்கொண்டிருந்த
நான் யாரென்று
அவனுக்குத் தெரியாதது போலவே
ஒரு முகவரியைத் தேடியபடி
கிழக்காக வந்துகொண்டிருந்த
அவன் யாரென்று
எனக்கும் தெரியாது
அவன் வீட்டை நானும்
என் வீட்டை அவனும்
தேடிக்கொண்டிருக்கிறோம் என்பதுகூட
இருவருக்கும் தெரியாது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...