Thursday, July 18, 2024

கவிதை 78

 

மகளுக்கு
நன்னடத்தை சான்றிதழ் வாங்குவதற்காக
அவள் படித்த பள்ளிக்கு
அவளோடு சென்றிருந்தேன்
தலைமை சகோதரி
பள்ளி குறித்தும்
குழந்தைகள் குறித்தும்
உரையாடிக் கொண்டிருந்தபோது
திடீரென ஒரு தாய்
ஆறாம் வகுப்பு படிக்கும்
தன் மகளோடு வருகிறார்
அவரைப் பார்த்ததும்
அருட்சகோதரி கலங்குகிறார்
அந்தத் தாயும் கலங்குகிறார்
அந்தக் குழந்தைக்கு உடம்புக்கு ஏதோ போல
என்னவென்று புரியவில்ல
உளறிக்கொண்டே இருக்கும்
ஓட்டை வாய் என்பாள் கலை
அது உண்மைதான் போல
ஏதும் அறியாமலே
இது பெரிய நோயே அல்ல
மருந்து வந்துடுச்சும்மா என்கிறேன்
அந்த தாய் சிரிக்கிறார்
சிரித்து காலமாயிற்றுபோல
விடைபெறுகிறார்
தைரியமா போங்க தாயி
கும்பிட்டபடி நகர்கிறார்
என்ன நோய்னு தெரியுமாப்பா
வரும்போது
மருத்துவ மகள் கேட்கிறாள்
தெரியாது
அடிச்சு உடற
நோயைக் கண்டுபிடிக்கவும்
மருந்தளித்து குணப்படுத்தவும்தான்
அறிவும் படிப்பும் தேவை
ஏதுமற்ற தாயின் கண்ணீரைத் துடைக்க
ஈரத்தைத் தவிர ஏதுமற்றவனின்
ஆறேழு சொற்கள் போதும்


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...