Monday, July 22, 2024

கவிதை 82

 

அதிகாலை
உழவர் சந்தைக்கு வந்தவள்

வெண்டைக்காயை
உடைத்துப் பார்த்தும்
ஒவ்வொரு
கத்திரிக்காயையும்
ஏழெட்டுமுறையேனும்
சுத்திப் பார்த்து
சொத்தையற்று பொறுக்கினாள்

சுண்டிப் பார்த்தும்
காதோரமாய் வைத்து
ஆட்டிப் பார்த்து
தேங்காய் வாங்கினாள்

பூச்சியில்லாத
கீரைக்கட்டை எடுத்தாள்

முடித்துவிட்டு
உழவர் சந்தைக்கு எதிரே உள்ள
சாப்பாட்டுக் கடையில்
இடியாப்பம் பாயா வாங்கினாள்

காய்களை
சுவரோரமாக வைத்துவிட்டு
இடியாப்பம் பாயாவை
சாப்பாடு மேசையில் வைத்துவிட்டு வந்தவளிடத்தில்
பழையசோறு பாத்திரத்தை நீட்டினாள்
முதலாளியம்மா

#கவிதை2024edn

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...