அதிகாலை
உழவர் சந்தைக்கு வந்தவள்
வெண்டைக்காயை
உடைத்துப் பார்த்தும்
ஒவ்வொரு
கத்திரிக்காயையும்
ஏழெட்டுமுறையேனும்
சுத்திப் பார்த்து
சொத்தையற்று பொறுக்கினாள்
சுண்டிப் பார்த்தும்
காதோரமாய் வைத்து
ஆட்டிப் பார்த்து
தேங்காய் வாங்கினாள்
பூச்சியில்லாத
கீரைக்கட்டை எடுத்தாள்
முடித்துவிட்டு
உழவர் சந்தைக்கு எதிரே உள்ள
சாப்பாட்டுக் கடையில்
இடியாப்பம் பாயா வாங்கினாள்
காய்களை
சுவரோரமாக வைத்துவிட்டு
இடியாப்பம் பாயாவை
சாப்பாடு மேசையில் வைத்துவிட்டு வந்தவளிடத்தில்
பழையசோறு பாத்திரத்தை நீட்டினாள்
முதலாளியம்மா
#கவிதை2024edn
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்