Wednesday, July 10, 2024

கவிதை 26

 

என் அதிகாலை கனவில்
கலியன் கடையில்
தேநீர்
குடித்துக் கொண்டிருந்த கடவுள்
என்னைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி
தினத்தந்தியில்
கவனத்தைப் புதைத்துக் கொண்டதற்கு
இந்த இரண்டுமோ
இரண்டில் ஒன்றோதான்
காரணமாக இருக்க முடியும்
சாதி வன்முறைகளை
கொலைகளை
எப்போதுதான் தடுப்ப என்ற
என் பழைய கேள்விக்கு
இப்போதும் அவனிடம்
பதில் இல்லை என்பது ஒன்று
எனக்கு
தேநீர் வாங்கித் தருவதற்கு அவனிடம்
காசு இருந்திருக்காது என்பது இரண்டு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...