Wednesday, July 10, 2024

கவிதை 61

 

உதடுகளுக்கும்
ஈறுகளுக்குமிடையே தேக்கி
யாருக்கும் தெரியாமல்
குதப்பிக்கொண்டே இருக்கிறாள் கிழவி
முப்பது ஆண்டுகளுக்கு முன்
தொங்கிச் சாக
சேலைச் சுறுக்கிற்குள்
கழுத்தை
நுழைத்துக் கொண்டிருந்த சமயம்
சரியாய்
அழைப்பொலியை அழுத்திவிட்டு
ஓடி
ஒளிந்துகொண்ட
அந்த
சேட்டைக்காரப் பொடிசுக்கான
முத்தத்தை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...