Wednesday, July 10, 2024

கவிதை 36

 

சுமார் என்று
சொல்லப்பட்ட அறை
சுவரெங்கும்
கரை
பிசுக்கு
இன்னும்
இன்னபிற
இத்தியாதிகளாய்
முகம் சுளித்து
திரும்பினால்
அந்த
குபேர மூலையின்
கதவுகளற்ற அலமாரியின்
ஒரு
சிமிண்டுப் பலகையின் கீழே
கிழிந்து தொங்கும்
ஒட்டடைக்கு
ஒரு விரக்கடைக்கு கீழே தென்பட்டதொரு
பென்சில் கிறுக்கல்
"அம்மா
நொம்மா"
பென்சிலோடு
நின்றுகொண்டிருந்த
எழுதத் தெரிந்தக் குழந்தைக்கும்
அவளது அம்மாவிற்கும்
சண்டை நடந்த
போர்க்களம்
இந்த அறை
தொங்கும்
அந்த
ஒட்டடையின்
ஒரு
விரக்கட்டைக்கு கீழே
"அம்மா
நொம்மா"
என்ற
ஒரு குழந்தையின்
அம்மாவிற்கான ஆசிர்வாதம்
ஒளிர்ந்து
விரவி மணக்கும்
அறையை
சுமாரான
அறை என்று
சொன்னவனைத்
துழாவிக் கொண்டிருக்கிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...