Wednesday, July 10, 2024

கவிதை 56

 

நலமா
என்று
உன்னிடமிருந்து
குறுஞ்செய்தி வந்தபோது
மழை பெய்துகொண்டிருப்பதாக
சொல்கிறார்கள்
நனைந்துகொண்டுதானிருக்கிறேன்
என்கிற என்னை
நக்கலித்துவிட்டு
அவர்கள் நகர்ந்ததும்
நலம் என்றனுப்புகிறேன்
ஜடத்தோடு பேசுவதுணர்ந்து
கேட்கலதான்
ஆனாலும்
நாங்களும் நலம்தானென்கிறாய்
கேட்டுதான்
நலமுணரமுடியுயமென்றால்
அன்பல்ல
கணக்கென்கிறேன்
நீ சொன்ன நன்றி சொல்கிறது
"ஆறு மாசத்துக்கு காய்
சாவு சனியனே"

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...