கடவுள் இல்லை என
நம்புபவன் நான்
எனக்குப் பின்னும்
நீங்கள்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
கடவுள் மரணமற்றவன் என்கிறீர்கள்
வாழ்வாங்கு வாழ்ந்தாலும்
நீங்களுமொருநாள்
போகத்தான் வேண்டுமென்பதால்
நீங்கள் கடவுளில்லை என்கிறேன்
பொய் பொய்யாய் சொல்கிறீர்கள்
ஈரம் , இரக்கமற்றிருக்கிறீர்கள்
இல்லாத கடவுளுக்கு
இருப்பதாக சொல்லப்படும்
குணங்கள் எதுவுமில்லை
உங்களிடம் என்பதால்
உங்களை நீங்களே
கடவுளென்பதை என்னால்
ஏற்க இயலாதென்பதோடு
சக கடவுளுக்கே
ஒழுகுகிற கூரையைக் கட்டி
அவனை நனையவிட மாட்டான்
கடவுள் என்பதால்
நீங்கள்
கடவுள் இல்லை என்கிறேன்
போக,
நீங்கள் தோற்றிருந்தால்
உங்களை அன்று
நேர்கண்டவரும்
இதை
ஏற்கமாட்டார்
என்பதுமறிக
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்