Wednesday, July 10, 2024

கவிதை 13

 

கடவுள் இல்லை என
நம்புபவன் நான்
எலும்பும் சதையுமாய்
இருக்கிறீர்கள் நீங்களென்பதால்
நீங்கள் கடவுளில்லை என்கிறேன்
எனக்குப் பின்னும்
நீங்கள்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
கடவுள் மரணமற்றவன் என்கிறீர்கள்
வாழ்வாங்கு வாழ்ந்தாலும்
நீங்களுமொருநாள்
போகத்தான் வேண்டுமென்பதால்
நீங்கள் கடவுளில்லை என்கிறேன்
பொய் பொய்யாய் சொல்கிறீர்கள்
ஈரம் , இரக்கமற்றிருக்கிறீர்கள்
இல்லாத கடவுளுக்கு
இருப்பதாக சொல்லப்படும்
குணங்கள் எதுவுமில்லை
உங்களிடம் என்பதால்
உங்களை நீங்களே
கடவுளென்பதை என்னால்
ஏற்க இயலாதென்பதோடு
சக கடவுளுக்கே
ஒழுகுகிற கூரையைக் கட்டி
அவனை நனையவிட மாட்டான்
கடவுள் என்பதால்
நீங்கள்
கடவுள் இல்லை என்கிறேன்
போக,
நீங்கள் தோற்றிருந்தால்
உங்களை அன்று
நேர்கண்டவரும்
இதை
ஏற்கமாட்டார்
என்பதுமறிக

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...