Wednesday, July 10, 2024

கவிதை 70

 


அப்பத்தா வீடு
சாமி தாத்தா வீடு
டாடி தாத்தா வீடு
அங்கிள் தாத்தா வீடு என்று
நான்கு வீடுகள் கிரிஷ் சாருக்கு
இதில் அப்பத்தா வீடு என்பது
உங்களைக் குழப்பப் போவதில்லை
அவனை
சாமி என்றழைப்பதால்
நான் சாமி தாத்தா
அவன் அம்மா
டாடி என்றழைப்பதால்
அவர் டாடி தாத்தா
அவள்
அங்கிள் என அழைப்பதால்
அவர் அங்கிள் தாத்தா
அப்பத்தா வீட்டைக் காலி செய்துவிட்டு
குடி போன
புது வீட்டிற்குத்தான்
அங்கிள் தாத்தா வீடு என்று
பெயர் வைத்திருக்கிறான்
தாத்தாக்கள் வீடுகள் எல்லாம்
போர் என்றும்
அப்பத்தா வீடுதான் அழகென்றும்
அங்குதான் போக வேண்டுமென்றும்
அடம் பிடிக்கவே
காட்டி வரலாமென்று
தூக்கிப் போனால்
அது
தாத்தா வீட்டைக் காலி செய்து வந்திருந்த
ஒரு குழந்தையின்
அவ்வா வீடாகி இருந்தது
அவ்வா வீடென்றும்
அப்பத்தா வீடென்றும்
சண்டையிட்டுக் கொண்டிருந்த
குழந்தைகள்
கொஞ்ச நேரத்தில் ஒன்றாய்
விளையாட ஆரம்பித்தபோது
வெங்காயம் உரிப்பதில்
அவ்வாவிற்கு
அப்பத்தா உதவ ஆரம்பித்திருந்தார்
வீடும் அவ்வப்பத்தா வீடாகியிருந்தது
விட்டுவிடுவோம்
அப்படியே இருக்கட்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...