Wednesday, July 10, 2024

கவிதை 32

 

எனக்கு
சர்க்கரையென்று
கலியனிடம்
யார்
சொன்னதென்கிறான்
புத்தன்
வேறொன்றுமில்லை
எனக்கான
கிளாசை
புத்தனிடமும்
புத்தனுக்கான
கிளாசை
என்னிடமும்
தந்ததைக்கூட
பெரிதாக எண்ணாத
புத்தனுக்கு
புத்தனுக்கு
சுகர் டெஸ்ட்
எடுப்பது
நல்லதென்று
கலியன் சொன்னதில்கூட
புகாரில்லை
புத்தனுக்கும்
வயசாகுதுல்ல
என்று
கலியன்
முடித்ததுதான்
சங்கடப்படுத்திவிட்டது போல
புலம்பிக் கொண்டே
போனான்
என்னமோ
போ
கலியா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...