Wednesday, July 10, 2024

கவிதை 28

 

என்னைப் பார்த்து
புன்னகைத்தபடியே
என்னைக் கடந்து போகிறார்
அந்தப் பெரியவர்
பள்ளிகளிலிருந்தும்
கல்லூரிகளிலிருந்தும்
இருபதாயிரம் என்ற அளவிலெல்லாம்
இல்லையெனினும்
படித்த
கணிச எண்ணிக்கை புத்தகங்களிலிருந்தும்
கற்றுக் கொள்ளவே இல்லை நான்
முன்பின் அறியாவர்களை நோக்கி
புன்னகைக்கும் வித்தையை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...