Wednesday, July 10, 2024

கவிதை 27

 

உங்களால் எங்களை
ஏதும் செய்ய இயலாதென்று சொல்லுமளவு
உங்கள் பலமறியாதவர்களல்ல நாங்கள்
எங்கள் அலுவலகக் கண்ணாடிகளை
உடைக்க போதுமான கற்களும்
கைகளில் பலமும்
உங்களுக்கு இருக்கிறது
எங்கள் அலுவலகத்தை
இடிக்குமளவு
எல்லாமிருக்கிறது உங்களிடம்
எங்களை வெட்டுமளவு பலமிருக்கிறது
உங்கள் அரிவாளுக்கு
ஒரே வெட்டில்
எங்களைச் சாய்க்குமளவு பலமிருக்கிறது
உங்கள் கைகளுக்கு
ஆனால்
நிலாச் சோறூட்டி
நீங்கள் வளர்த்த உங்கள் குழந்தைகளை
ஈ எறும்பு கடிக்காமல்
நீங்கள் காப்பாற்றிய உங்கள் குழந்தைகளை
நோய் நொடிகளிலிருந்து
நீங்கள் காப்பாற்றிய உங்கள் குழந்தைகளை
எங்கள் உயிர் கொடுத்தும்
உங்களிடமிருந்து காப்பாற்றுவதற்கான
எங்களது போராட்டத்தைச் சாய்க்க
உங்கள் கத்திகளும் கரங்களும்
பலமற்றவை என்று சொல்கிறோம்
எங்கள் போராட்டம்
எங்கள் அன்பின் இன்னொரு வடிவம்
அந்த ஈரத்தை எரிக்கவல்ல கங்கு
உங்களிடம் இல்லை
என்று சொல்கிறோம்
அவ்வளவுதான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...