Wednesday, July 10, 2024

கவிதை 24

 

ஊடலை
ரசித்து வாசிக்க
சங்கம் போன எனக்கு
உன்னோடான
உரையாடல்களே
போதுமென்றிருக்கிறது
பாரேன்
உன்னோடு
எங்கும்
வரப்போவதில்லை
என்று
நீ ஆரம்பித்த
நம் உரையாடல்
கொஞ்சம்
சண்டைக்குப் பிறகு முடிந்தது
நாலாந்தேதி போறோந்தானே
என்ற உன் கேள்வியோடு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...