Wednesday, July 10, 2024

கவிதை 18

 

குழாய் விளக்கிற்கு கீழே
ஒரு பூச்சி
பூச்சிக்கு கீழே
தவத் தோரணையில்
ஒரு பல்லி
என்ன நடக்குமென்று
பார்த்துக் கொண்டிருந்த என்னை
வெளியே இழுத்தது அழைப்பொலி
வந்து பார்த்தால்
பூச்சியும் காணோம்
பல்லியும் காணோம்
சாப்பிட்டிருக்குமா பல்லி
இல்லை
தப்பித்திருக்குமா பூச்சி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...