Wednesday, July 10, 2024

கவிதை 69

 

சுவரில்
மோன்வி வரைந்த பூச்செடியில்
யானையையோ
வேறெதையோ
பார்ப்பவர்களால்
அந்தச் செடியிலிருந்து
அவள்
ஒரு பூவைப் பறித்ததையோ
அதைத்
தலையில் சூடிக்கொள்ள
எத்தனித்தபோது
அது கீழே விழுந்து
காணமல் போனற்காக
அவள் அழுவது கண்டோ
சிரிக்கத்தான் முடியும்
அவர்களை
உறவு துறந்த கையோடு
சோபாவிற்கடியில் கிடந்த
அந்தப் பூவை எடுத்து
அவள் தலையில் வைக்கிறேன்
அப்படிச் சிரிக்கிறாள்
பூ அப்படித்தான் சிரிக்கும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...