சுவரில்
மோன்வி வரைந்த பூச்செடியில்
யானையையோ
வேறெதையோ
பார்ப்பவர்களால்
அவள்
ஒரு பூவைப் பறித்ததையோ
அதைத்
தலையில் சூடிக்கொள்ள
எத்தனித்தபோது
அது கீழே விழுந்து
காணமல் போனற்காக
அவள் அழுவது கண்டோ
சிரிக்கத்தான் முடியும்
அவர்களை
உறவு துறந்த கையோடு
சோபாவிற்கடியில் கிடந்த
அந்தப் பூவை எடுத்து
அவள் தலையில் வைக்கிறேன்
அப்படிச் சிரிக்கிறாள்
பூ அப்படித்தான் சிரிக்கும்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்