Wednesday, July 10, 2024

கவிதை 34

 

காஸா கவிதை 01
***********************
குழந்தையின்
பிணம் தடுக்கி
கிழவனின்
பிணத்தின்மேல் விழுந்தவனின்
கழுத்தைப் பிடித்த
கிழவனின் பிணத்திற்கு
வலதுபுறமாக
குண்டடிபட்டு
செத்துக் கொண்டிருந்த
பாலஸ்தீனன்
சொன்னான்
பயப்படாதே
இஸ்ரேலியனே
பயப்படாதே
கொல்ல
மாட்டேன்
நீ மட்டுமல்ல
தாங்கள்
அழித்துக்
கொண்டிருப்பதாக நம்பும்
அனைவரும்
தாங்கள்
அழித்துக் கொண்டிருக்கும்
சமூகங்கள்
வீரிட்டு
எழுவதை
வாழ்ந்து
பார்த்துவிட்டுதான்
சாக வேண்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...