Saturday, July 20, 2024

கவிதை 81

 

அவன் சிறுவனாக இருந்தபோது
அந்தச் செடியை
சுமந்தபடியே அலைந்ததை
யாரும் எதுவும் சொல்லவில்லை என்பதோடு
கொண்டாடவுமே செய்தனர்
அவன் வளர வளர
அந்தச் செடியும் வளர்ந்தது
அவன் இளைஞனானபோது
அதுவும்
கவாத்து செய்யப்படாத
ஒரு இளைய மரமாய் வளர்ந்திருந்தது
இப்போது
அவன் அந்த மரத்தை சுமந்தலைவது
ஏனோ
அவன் அம்மாவை கொஞ்சம் உறுத்தியது
வேண்டாமென்றாள்
அம்மாவை உதறினான்
அதையே சொன்ன அப்பாவையும்
உதறினான்
முகம் சுளித்த மனைவியை
விலகினான்
ஒருநாள்
அதைக் கொஞ்சம்
இறக்கி வைக்கலாமா என்று
அவனுக்கே யோசனை வந்தபோதுதான்
அவன்
தானந்த மரமாகவே மாறியிருந்ததை
உணரத் தலைபட்டான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...