Wednesday, July 10, 2024

கவிதை 37

 

சுரக்கச் சுரக்க
அதுவரை சேமித்து வைத்த
அன்பனைத்தையும்
உன்னிடம் தந்தபின்புதான்
உன்னோடான
எனது ஒவ்வொரு உரையாடலும்
முடியும் ஆகையால்
அன்றைய உரையாடல் முடிந்ததும்
என் சட்டை பட்டனோரம் மீந்திருந்த
ஒரு சின்னப் பிசிறளவுத் துண்டு அன்பு
அதிர்ச்சியைத் தந்தது
அதிர்ச்சியில்
பேயறைந்ததுபோல் இருந்த
என்னிடமிருந்த
அந்த
சிறு துண்டு அன்பை
எடுத்துக் கொண்டு
அறுபது கிலோ என்னையும் அன்பாக்கி
உன்னிடமளிக்கச் சொல்லிவிட்டுப் போகிறாள்
பல்லே முளைக்காத
குழந்தை ஒருத்தி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...