நீதி வேந்தே
எந்த அழுத்தமும்
எம்மை
எதுவும் செய்ய இயலாது
குழந்தையின்
உடை களைவதில்
குற்றம் காணாத
நீதி தேவன் குழந்தையின்
உடை களைபவனையும்
குற்றம் சொல்லி
கேள்வி கேட்கத்தான்
எங்கள் குரல்
அதற்குத்தான்
எங்கள் கல்வி
அதற்குத்தான்
எங்கள் எழுத்து
அதற்குத்தான்
எங்கள் எல்லாம்
நீதி தேவனிடம்
இறுதியாய்
சாக்ரடீஸ் சொன்னதுதான்
நீங்கள்
உங்கள் வேலையைப்
பாருங்கள்
நாங்கள்
எங்கள் வேலையைப்
பார்க்கிறோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்