Wednesday, July 10, 2024

கவிதை 10

 


ஒரே ஒரு
காரணம்தான்

உனக்கு முன்னால்
நான் போய்விட வேண்டுமென்று
விரும்புவதற்கு

என் சார்ந்த எல்லோரிடமும்
வெளிப்படுத்திவிட்டேன்
நம்மை

உன் சார்ந்த யாரிடமும்
நம்மின்
“அ” னவைக்கூட
ஆரம்பிக்க மறுக்கிறாய் நீ

நான் செத்து
நீ
அழ நினைத்தால்

என்ன சொல்லியும்
அழலாம்

என்
சார்ந்தவர்கள்
உன் கைகளைப்
பற்றுவார்கள்

அணைவார்கள்

ஆறுதல்
சொல்வார்கள்
கண்ணீர் துடைப்பார்கள்

நீ
செத்து
நான் இருந்தால்

அழக்கூட
உரிமை இருக்காது
எனக்கு

எனக்கு
அழுவதற்கு
உரிமை தராத
சாவு
உனக்கெதற்கு

நான்
முதலில்
போய்விடுகிறேன்

இருந்து
என் சாவில்
அழு


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...