Sunday, August 28, 2016

நடைப்பயிற்சி முடியும் தறுவாயில்

இன்று மாலை நடைப்பயிற்சி முடியும் தறுவாயில் சிகப்பூரிலிருந்து யாழிசை மணிவண்ணன் அலைபேசியில் அழைத்தார்.
இன்று அங்கு நடைபெற்ற ”அடம்செய விரும்பு” நூலின் வெளியீட்டு விழாவின்போது ஏற்புரையாற்றவந்த தோழர்கோபால் கண்ணன் என்னைக் குறித்து பேசியதாகவும் அதை உடனே எனக்கு கடத்திவிடவேண்டும் என்று அழைத்ததாகவும் கூறினார்.
கேட்பதற்கு மகிழ்ச்சியாயிருந்தது. இத்தனைக்கும் கோபால் என்னோடு பேசியதுகூட இல்லை.
அவரது உரையினூடே எனது
“குழந்தைகள்
உயரத்திற்கு
குனிந்து பார்த்தால்தான்
அவர்களின் பிரமாண்டம் புரியும்”
என்பதுமாதிரி நான் எழுதியிருந்த நிலைத்தகவலை கூறினார் என்றும் கூறினார்.
இதை மீளாகத்தான் போட்டிருந்தேன்.
இரண்டு விஷயங்கள்
1. அவ்வப்போது பிடித்தமான நிலைத் தகவல்களை மீண்டும் வைக்கலாம்.
2. காசை சேர்த்துக் கொண்டு ஒருமுறை சிங்கப்பூர் சென்று அங்கிருக்கும் தமிழ் மக்களைப் பார்த்து வர வேண்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...