இன்று பள்ளியில் சுற்றி வரும்போது ஒரு ஆசிரியரற்ற எட்டாம் வகுப்பினொரு பிரிவில் நுழைந்தேன்.
"என்ன பாடம்?"
"சோஷியல்"
"சாரெங்க?"
"எச் எம் சார் கூப்டாங்கன்னு போயிருக்காங்க"
"சரி, நாம கொஞ்சம் பேசலாமா?"
"ஐ, பேசலாமே"
"காந்தி தெரியுமா?" என்று கேட்டு முடிப்பதற்குள் சிலர் 'மஹாத்மா' என்று கத்தினார்கள், சிலர் 'தேசப்பிதா' என்றனர்.
இனி இப்படி சத்தம் போடக்கூடாது விடை தெரிந்தவர்கள் கைதூக்கினால் போதுமென்று நெறிப்படுத்யினேன்.
காந்தி எப்படி இறந்தார்? என்றதும் எல்லோரும் கைதூக்கினார்கள். ஒரு பிள்ளையை சொல்ல சொன்னேன்.
"கோட்சே சுட்டுக் கொனுட்டார், பாவம்" என்றான் ஒரு குழந்தை.
அடுத்து நேரு தெரியுமா என்றதும் ஆசிய ஜோதி, முன்னால் பிரதமர், என்று பதில்கள் வந்தன.
சரிப்பா, நேரு எப்படி செத்தார் தெரியுமா என்றதும் ஒரு பிள்ளை எழுந்து "அவர வெள்ளக்காரங்க தூக்குல போட்டுட்டாங்க" என்றதும் " சார் அவன் சரியாந்திர மக்கு சார் " என்றனர் குழந்தைகள்.
" ஏம்பா மக்குங்குன்னு சொல்றீங்க? "
"தானா செத்தவர தூக்குல போட்டாங்கன்னு சொன்னா மக்குதாங்க சார்" னு சொல்றான்.
மனித வளம்னு சொல்றாங்க பெரியவங்க
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்