Tuesday, August 2, 2016

கடவுள் என்றொருவன் இருந்தால்

மஹாராஸ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ளது மலின் என்ற பழங்குடிகள் வாழும் கிராமம். இன்று அது உலகெங்கும் பரபரப்பாய் பேசப்படுவதறது. அதற்கான காரணம் மிகவும் சோகமானதும் வலியினைத் தருவதுமாகும்.
சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த கிராமத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 250 பழங்குடி இன மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த நிலச்சரிவு இயற்கையாய் ஏற்பட்டது அல்ல என்றும், மாறாக சில மனிதர்களால் உருவாக்கப் பட்ட பேரழிவு என்றும் என்றும் தெரிய வருவதாக மார்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் அறிக்கை கூறுவதாக இன்றைய தீக்கதிர் ( 02.08.2014) சொல்கிறது.
மலினுக்கு அருகில் உள்ள திண்டா அணையிலிருந்து வெள்ளக் காலங்களில் நீர் திறந்து விடப் பட்டபோது நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் சேதம் இந்த அளவிற்கு இல்லை. ஆனால் இப்படி நிகழக் கூடும் என்ற எச்சரிக்கை மாநில மற்றும் மத்திய அரசுக்கு தரப் பட்டிருக்கிறது.
இங்கு பழங்குடிகளுக்கு நல்லது செய்வதாக சொல்லிக் கொண்டு
ஜே பி சி இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதுதான் பேரழிவிற்கான பெருங்காரணமாக சொல்லப்படுகிறது.
பழங்குடிகளை எப்படியேனும் அப்புறப் படுத்திவிட வேண்டும் எனும் நோக்கமே என்றும் தெரிகிறது. உள்ளூர் அரசியல் வாதிகள் , இயந்திர உரிமையாளர்கள் மற்ரும் பேராசை பிடித்த அதிகாரிகள் இணைந்து இதை செய்திருக்கக் கூடும் என்றும் தீக்கதிர் சந்தேகப் படுகிறது.
அந்த சந்தேகத்தில் நியாயம் இருப்பதாகவே படுவதால் தீவிர விசாரனையும் நிரூபனமானால் கடுந்தண்டனையும் உரியவர்களுக்கு போய் சேரவேண்டும்.
கடவுள் என்றொருவன் இருந்தால் அவனுக்கே முந்திப் பிறந்தவர்கள் பழங்குடிகள்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...