Sunday, January 3, 2016

நெஜம்மா பொய்

மூன்றிலிருந்து நான்கு இருக்கலாம் அவனுக்கு. வெண்கலக் குரலில் தெளிவாய் இருந்தது அவனது பேச்சு. பேருந்தில் யார் எதைப் பேசினாலும் அதை திருப்பி சத்தமாய் பேசிக் கொண்டிருந்தான்.
‘பஸ் ஸ்டாண்ட் வந்துட்டு கூப்பிடுறேண்டா மாப்ள’ என்றால் அச்சு பிசகாமல் இவனும் சத்தமாக ‘பஸ் ஸ்டாண்ட் வந்துட்டு கூப்பிடுறேண்டா மாப்ள’ என்கிறான். அவனது தந்தையும் தாயும் அவனை வாயடைத்து உட்கார வைக்க என்னென்னமோ செய்து விட்டார்கள்.
ஒரு கட்டத்தில் பிஸ்கட் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். அது பையின் அடியில் இருந்ததால் எடுப்பதில் சிரமப் பட்ட அவனது தந்தை ‘பெரம்பலூர் வந்துடுச்சுடா. வீட்டுக்கு போயி சாப்பிடலாம்’ என்றார்.
உடனே, ’ஓல்டேன், பஸ்ஸ நிறுத்துங்க’ என்று கத்த ஆரம்பித்தான்.
இப்படி கத்தினால் பஸ்ஸை நிறுத்திவிடுவார்கள் என்று மிறட்டியவரிடம் அதான் பெரம்பலூர் வந்துடுச்சுல்ல என்றான்.
இல்லடா, பெரம்பலூருக்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்றவரிடம் ‘அப்ப பொய் சொன்னியா’ என்கிறான்.
ஏதேதோ சுற்றி வளைக்க ஆரம்பித்தவரிடம் கேட்டான், நெஜம்மா சொல்லுப்பா பொய்தான சொன்ன?’
பேருந்தே சிரித்தது

2 comments:

  1. பிள்ளை விவரமானவன் போல!

    ReplyDelete
    Replies
    1. குழந்தை குழந்தையாய் இருக்கிறான் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...