Sunday, January 17, 2016

மக்கள் பாடகன் இனி பாட மாட்டான்






முகநூலைத் திறந்ததும் தோழர் மார்க்ஸ் அவர்களின் தோழர் KAG அவர்களுக்கான இரங்கல்தான் கண்ணில் பட்டது.
இன்று காலைதான் தோழர் எஸ் ஏ பி அவர்கள் தோழர் KAG அவர்கள் குறித்து இரண்டு விஷயங்களைப் பதிவிட்டிருந்தார்.
1. தோழர் KAG திரு கக்கன் அவர்களின் பேரன் என்பது
2. ஒருமுறை தோழர் KAG அவர்கள் இளையராஜா அவர்களை தலித் ஆளுமையாக அடையாளப் படுத்தப் போக அதற்காக அவர்மீது வழக்குப் போடப் போவதாக எச்சரித்தது.
இந்த மாத காக்கைக்கு இளையராஜா பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அனுப்பிவிட்டு தோழர் முத்தையாவோடு பேசும்போது இந்தத் தகவலையும் அவரோடு பகிர்ந்தேன். ஏன் இதை எழுதவில்லை. இதையும் சேர்த்து ஆவணப் படுத்துங்கள் என்றார். பக்கம் பற்றி கவலையே வேண்டாம் என்றும் சொன்னார்.
சேர்த்து விடுவோம் என்று கணினியை திறந்து, கட்டுரைக்குள் போவதற்குள் கொஞ்சூண்டு முகநூலை மேயலாமே என வந்தால் யாரைப் பற்றி எழுத வந்தேனோ அவர் இறந்து போனதாய் தகவல்.
அவரோடு இரண்டு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அவர் கூட்டங்களுக்கு நிறைய போயிருக்கிறேன்.
தோழர்களின் துயரில் வலியில் பங்கேற்கிறேன்.
கண்கள் கசிய ‘ஆக்காட்டி ஆக்காட்டி’ போட்டுக் கேட்கிறேன்.
வேறென்ன செய்ய?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...