Thursday, January 28, 2016

காய்தல் உவத்தலின்றி



ஷெல்லிக்கு படகில் பயணிப்பது பிடித்தமான ஒன்று. அது போன்ற ஒரு சமயத்தில்தான் அவரது படகு அலைகளின் கோரத் தாண்டவத்திற்கு இரையாகி கவிழ்ந்தது.
அவரது மரணச் செய்தி பரவவே கரையில் ஒரு பெரும் கூட்டம் நின்றது. அதில் ஒருவர் ஆத்திகர். ஷெல்லியின் நண்பர். ஷெல்லியிடம் அவருக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அவர் நாத்திகராய் இருந்ததுதான்.
ஷெல்லியின் உடல் கரைக்கு கொண்டு வரப் படுகிறது.
அந்த ஆத்திக நண்பர் அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கை நண்பர் ஒருவரிடம் “ஷெல்லியின் கோட்டுப் பையில் ஒரு வேதாகமம் இருந்தது. அவர் ரகசியமாய் பைபிள் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்” என்று எழுதுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தார்.
எரிச்சலடைந்த பைரன் அந்த நண்பரிடம் சொன்னது நமக்கும் ரொம்பப் பொருந்து. பைரன் சொன்னார்,
“ நண்பரே, அருள்கூர்ந்து ஷெல்லியை ஷெல்லியாகப் பாருங்கள்”
ஆமாம் ,
நாமும் கொஞ்சம் பாரதியை பாரதியாகவும், காந்தியை காந்தியாகவும், எந்த ஒருவரானாலும் அவரை அவராகவும் காய்தல் உவத்தல் இன்றி எப்போது பார்க்கத் தொடங்குவோம்?

5 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...