Friday, March 25, 2016

அதுக்காக அஞ்சர மணி நேரமா நின்னுட்டு வருவ”



வழக்கம் போலவே கோயம்பேடு பேருந்து நிலையம் நிறைந்து கசிந்தது. இரக்கமுள்ள நட்த்துநர் ஒருவரின் பெருந்தன்மையால் ஒரு வழியாக இடம் கிடைத்தது. ஆனால் கறாராக சொன்னார்,

“திருச்சி டிக்கட் வாங்கிக்கங்க சார். துறை மங்கலத்தில் இறங்கிக்கங்க”

“ சரிங்க சார்”

அமர்ந்தேன்.

சற்று நேரத்திற்கெல்லாம்  பேருந்து நிறைந்து விடவே புறப்பட்டது.

அஷோக் பில்லர் அருகேஒரு இளைஞன் ஏறினான். உள்ளே என் அருகே வந்தவன் எங்கும் இடமில்லை என்பதால் இறங்கி விடலாமா என்று தயங்கினான்.

நடத்துநர் சொன்னார்,

“எல்லா பஸ்ஸும் கூட்டம்தான். பேசாம வாப்பா. இதோ துறை மங்கலத்துல சார் இறங்கிடுவார். உட்கார்ந்துக்கலாம்.”

பையனுக்கு திருப்தி.

பயணச்சீட்டு எல்லாம் போட்டு முடிந்ததும் நடத்துநர் அவனை ட்ரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் உட்கார அழைத்தார்.

“ பரவாயில்லீங்க சார். சார் இறங்கியதும் இங்கயே உட்கார்ந்துக்கறேன்”

சொன்னார்,

“அது சரிப்பா. அதுக்காக அஞ்சர மணி நேரமா நின்னுட்டு வருவ”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...