Monday, February 22, 2016

உங்களுக்கும் சொல்லிவிட்டேன்

பள்ளிக்குப் போய்க்கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் சிலர் அலை பேசியில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

எல்லா பயணிகளுக்கும் பயணச்சீட்டுகளை வழங்கி முடித்ததும் ஒரு மாணவனிடம் வந்தார் நடத்துனர்,

“இப்ப யாருக்கு  எஸ் எம் எஸ் அனுப்புற?”

“கோபிக்குத்தான்”

“ இங்க இருந்து ரெண்டாவது சீட்ல இருக்கவனுக்கு எஸ் எம் எஸா?”

எல்லோருக்கும் நன்கு தெரிந்த நடத்துனர் போலும்.

“க்ளோபல் வார்மிங்னா என்னான்னு தெரியுமாடா சதீஷ்?”

“அதுக்கென்னங்கண்ணே?”

”இல்லடா முன்னெல்லாம் நிறைய சிட்டுக்குருவிகளப் பார்க்க முடியும். நம்ப வீட்டு சைடு எவ்வளோ பார்க்கலாம். இப்ப எங்கயாச்சும் தட்டுப் படுதாடா?”

“இல்ல”

“ இவ்வளோ எஸ் எம் எஸ் அனுப்பினா எப்படி இருக்கும்?”

“அதுக்கும் இதுக்கும் என்னண்ணே”

“ படிக்கிறதானே. இதுகூட தெரியாதா”

அவர் பேச ஆரம்பித்ததும் மற்ற பசங்க , “மாட்னாண்டா மாப்ள. நாம பிச்சுக்குவோம் “ என்று  நகர்ந்து போனார்கள்.

அவன் கவனிக்கிரானா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப் படவில்லை அவர். முன்பெல்லாம் பெரம்பலூரிலிருந்து திருச்சி வருவதற்குள் ஏராளம் தேன் கூடுகள் தட்டுப்படும் என்றும், தற்போது தேன்கூடுகளையே காண முடியவில்லை என்றும், செல் வந்ததுதான் இதற்கு காரணமென்றும், செல்லை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டே போனார். இல்லாது போனால் இயற்கை சம நிலை பாதிக்கும் என்றும் அவர் சொன்னதை எல்லாம் அவன் கேட்டானோ என்னமோ நான் கேட்டேன்.

உங்களுக்கும் சொல்லிவிட்டேன்

6 comments:

  1. உண்மைதானே தோழர்
    இயற்கைச் சமநிலையை மாற்றியமைத்த பெருமை
    மனிதனுக்கு மட்டுமே உண்டு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றிங்க தோழர். பெயரோடு வரலாமே

      Delete
  3. உண்மையான கருத்து அய்யா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...