Wednesday, February 24, 2016

நெஞ்சறிந்து பொய்சொன்னீர்கள்

எல்லாம் பொய் என்று நிரூபணமாகி விட்டது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார்கள் என்று அந்தக் குழந்தைகள்மீது தேசவிரோத வழக்குத் தொடுத்தீர்கள்.
ஊடகம் வெளியிட்ட ஆவணம் பொய் என்றும் தாங்கள்தான் வேண்டுமென்றே அதைச் செய்ததாகவும் அந்த தொலைக்காட்சி நிறுவனமே ஒத்துக் கொண்டிருக்கிறது.

அந்தக் குழந்தை உமர்காலித் பதினெட்டுமுறை பாகிஸ்தான் சென்று பயிற்சி எடுத்து வந்த தீவிரவாதி என்று குற்றம் சுமத்தினீர்கள்.
அவன் ஒருமுறைகூட பாகிஸ்தானுக்கு போனதில்லை என்பதும் அவனிடம் கடவுச்சீட்டே இல்லை என்பதும் நிரூபணமாகியிருக்கிறது.
திரும்பத்திரும்ப ஊடகங்களிலும் தெருக்களிலும் இறங்கி எங்களை எங்கள் பிள்ளைகளை தேசத்துரோகிகள் என்று நெஞ்சறிந்து பொய்சொன்னீர்கள்
பெற்றோரை தாக்கினீர்கள்
இந்தக் குழந்தைகளின் சகோதரிகளை வன்புணரப் போவதாகவும் ஆசிட் ஊற்றி சிதைக்கப் போவதாகவும் மிரட்டினீர்கள்
ஒரு பெரியமனிதர் எங்கள் குழந்தையை அவளது தந்தையே சுட்டுக்கொல்ல வேண்டுமென்று வெறிகொண்டு கூச்சலிட்டார்
ஒரே கேள்விதான்,
எல்லாம் பொய் என்று நிரூபணமாகியுள்ள நிலையில் புரளியைப் பரப்பியவர்களை, எங்கள் குழந்தைகளை வன்புணர்வோம் என்றும் அவர்கள்மீது ஆசிட் ஊற்றுவோம் என்றெல்லாம் மிரட்டியவர்களையும் எப்போது கைது செய்யப் போகிறீர்கள்?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...