Tuesday, February 23, 2016

முதலில் கொஞ்சம் வெட்கப்படுங்கள்


நேற்று நான் சொன்னதை அப்படியே அச்சுப் பிசகாமல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மாண்பமை வெங்கையநாயுடு அவர்கள் கூறியுள்ளார்.
"இடதுசாரிகள்மீது ராஜா கூறியுள்ளவை ஏற்புடையவையல்ல. ராஜா நாகரீகமாக பேசுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் " என்று கூறியிருக்கிறார்.
திரு.ராஜாவிடத்து ஒன்றும் திரு.வெங்கையநாயுடு அவர்களிடம் ஒன்றும் நமக்குண்டு.
1) நீங்கள் நாகரீகம் கற்கவேண்டும் என்று சொல்பவர் உங்கள் எதிரியல்ல திரு. ராஜா அவர்களே. உங்கள் கட்சியின் முன்னாள் தலைவர், மிக மூத்த தலைவர். உங்கள் கட்சியே நீங்கள் கூறியவற்றை நிராகரிதிருக்கிறது.
முதலில் கொஞ்சம் வெட்கப்படுங்கள். பிறகு வருத்தப்படுங்கள். நாவடக்குங்கள்.
2 ) உங்கள் கூற்றுப்படியே திரு ராஜா அவர்கள் அநாகரீகமாகப் பேசியுள்ளார். நீங்களே ஏற்கமுடியாததை பேசியிருக்கிறார். நீங்கள் ஏற்கமுடியாததை பேசிய கீர்த்தி ஆசாத்மீது எடுத்த நடவடிக்கையையேனும் திரு ராஜாமீது எடுக்க வேண்டாமா?
இப்படி இன்னொருமுறை உளறினால் நடவடிக்கை எடுப்போம் என்றாவது நீங்கள் சொல்லியிருக்க  வேண்டாமா?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...