Saturday, February 20, 2016

ஒரு அழைப்பு



2013 ஆம் ஆண்டு இதே நாளில்
***********************************   

ஒரு அலைபேசி அழைப்பு ஒரு மனிதனை உசுப்பி உற்சாகத்தின் விளிம்புக்கு அழைத்துப் போகுமா?

போனது.

இன்று மதியம் பேராசிரியர் கல்யாணி அவர்களிடமிருந்து அழைப்பு.

” இவனுக்கு அப்போது மனு என்று பேர்” பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 5 நூல்களை அனுப்புமாறு கேட்டபோது என்மீது எனக்கொரு பிடிப்பும் மரியாதையும் வந்தது.

வீட்டிற்கு வருவேன் எட்வின். விக்டோரியாவையும், கீர்த்தனாவையும் பார்த்து பேசனும் என்று அவர் பேசிய பொழுது கண்கள் துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.

தோழர் Thaai Thaai Suresh அவர்களுக்கு நான் இரண்டு வகைகளில்கடமை பட்டிருக்கிறேன்.

அவர் உரிமையோடு கேட்ட ஒரு உதவியை செய்ய இயலாத நிலையில் இருந்தேன். அது ஒன்று.

சொல்லுக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் இடைவெளியற்ற ஒரு மனிதரோடு தொடர்பேற்பட காரணமாய் இருந்தது இரண்டு.

நன்றி சுரேஷ்.

பேராசிரியர் அய்யா உங்களது வருகைக்காக ஏங்கித் தவமிருக்கிறது நம்ம வீடு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...