Tuesday, February 16, 2016

சொந்த முகத்தோடும் சுய முகவரியோடும் வருக


1948 ஆம் ஆண்டு சுன்னத் செய்துகொண்டும் கையிலே ‘இஸ்மாயில்’ என்ற பெயரைப் பச்சைக் குத்திக் கொண்டும் காந்தியின் படுகொலையில் ஆரம்பித்தீர்கள் உங்களது அருவருப்பான, கோழைத்தனமான அயோக்கியத்தனத்தின் அரசியல் பயணத்தை.

பிறகு அவ்வப்போது நீக்களே பாகிஸ்தான் கொடியை ஏற்றினீர்கள். பழியை அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது சுமத்தினீர்கள். அவர்கள்தான் செய்திருப்பார்கள் என்பதுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்தினீர்கள். அம்பலப் பட்டும் போனீர்கள். ஆனாலும் என்ன தண்டனைக்கு தப்பினீர்கள்.

அவ்வப்போது பெட்ரோல் குண்டுகளை உங்கள் வீடுகள்மீதும் அலுவலகங்கள் மீதும் நீங்களே வீசினீர்கள். கையும் களவுமாய் அம்பலப் பட்டாலும் தண்டனைகளை உங்கள் எதிரிகளுக்கே கொடுத்தீர்கள்.

இப்போது இப்படி ஒரு கோஷத்தையும் நீங்களே போட்டது அம்பலப் பட்ட பின்பும் மாணவர்கள் மீது வழக்கிருக்கிறது.

ஆமாத்மி வேஷத்தில் இப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் பெயர்ப் பலகையின்மீது கரியால் எழுதி அசிங்கப் பட்டிருக்கிறீர்கள்.

உங்களிடம் ஒரு கோரிக்கை உண்டு,

“சொந்த முகத்தோடும் சுய முகவரியோடும் எதை செய்ய முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள்.”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...