Monday, February 29, 2016

அறிவியல் தினம்


(28.02.2012 அன்று எழுதியது)
” ராமன் விளைவு” களுக்காக சர் சி வி ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்ட தினம் இது என்பதை கீதா வெங்கட் எழுதியிருந்தார்.
இந்த செய்தியை ஞாபகப் படுத்தியமைக்காக மிகுந்த நேர்மையோடு அவர் இருக்கும் திசை நோக்கி வணங்கிக் கொள்கிறேன்.
கொல வெறி பாடல் கொண்டாடப் படும் அளவிற்கு அல்லது அதில் ஒரு புள்ளியளவு கூட ராமனைப் போன்றவர்கள் கொண்டாடப் படாமைக்கு பிள்ளைகள் காரணமே அல்ல.
அவர்களிடம் ராமனை தேவையான அளவு கொண்டு சேர்க்காத நம் குற்றம்.
மீண்டும் ஒரு முறை நன்றி கீதா.
நான் 28 02 1931 அன்று அவருக்கு நோபல் வழங்கப் பட்டதாக நினைத்திருந்தேன். அவருக்கு 1931 லும் தாகூருக்கு 1913 லும் நோபல் கிடைத்ததாக வாசித்திருந்தேன். கீதாவை வாசித்தபோது அது 1928 என்று இருந்தது.
விக்கி பீடியாவில் 1930 என்றிருக்கிறது.
இதில் எதுவும் இல்லை தான். ஆனாலும் தெரிந்து கொள்ள முடிந்த விஷயம் இது என்பதால் எந்த வருடம் என்பதை யாரேனும் சொன்னால் நன்றிக்கு உரியவர்களாவோம்.
ஒரு செய்தி சொல்ல வேண்டும்,
தாகூரும் ராமனும் கிடைத்த பரிசுத்தொகையை வங்கிகளில் போட்டனராம். அவர்கள் போட்ட வங்கிகள் இரண்டுமே திவாலாகிப் போனவாம். இதுவும் சரிதானா என்று யாரேனும் சொன்னால் கடமைப் படலாம்.
இன்று அறிவியல் தினமென்பது எத்தனை பேருக்குத் தெரியும். கீதாவை வாசித்த பின்புதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
முட்டாள்கள் தினத்தைக் கூட இன்னும் கொஞ்சம் கூடுதல் முனைப்போடு கொண்டாடுகிறோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...