ஆனால் நேற்று நானே "தங்கிதான் கிளம்ப முடியும். எனவே அறையை நீட்டிப்பா" என்று பரிதியிடம் கேட்டபோது அவனுக்கு ஆச்சரியம்.
காலையில் ஏலகிரிமலையில் அண்ணா கல்வியியல் கல்லூரி மாணவர்களோடும் மதியம் நாட்றாம்பள்ளி கலைமகள் கல்வியியல் கல்லூரி மாணவர்களோடும் உரையாடிவிட்டு திரும்பும்போதுதான் அறையை நீட்டிக்கச் சொல்லி பரிதியிடம் சொன்னேன். இருசக்கர வாகனத்திலேயே மலை ஏறி இறங்குவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.
என்னமோ தெரியவில்லை தங்கிப் போகவேண்டுமென்று தோன்றியது
இரவு உணவு முடித்துவிட்டு வெகுநேரம் கழித்து வீடு திரும்பி காலை வந்து பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பிய பிள்ளை நா. கோகிலன்.
இரவு உணவு முடித்துவிட்டு வெகுநேரம் கழித்து வீடு திரும்பி காலை வந்து பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பிய பிள்ளை நா. கோகிலன்.
மகிழ்ந்தேன் தோழர்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete