Thursday, July 31, 2014

அதற்கும் இதற்கும்

ஊர் நாட்டாமை சொன்னார்,

வர திங்கக் கிழமை ஊருல இருக்கிற எல்லோருக்கும் பஞ்சாயத்து சார்பா கறி விருந்து,

வர புதங்கிழமை வடக்குத் தெருவுக்கு ஒரு பள்ளிக்கூடத்துக்கு கால் கோலுறோம்,

தெக்குத் தெருவுக்கு அன்னிக்கே ஒரு ஆஸ்பத்திரி,

நடுத் தெருவுல மாட்டாஸ்பத்திரி,

மேற்குத் தெருவுல ஒரு சினிமா கொட்டா,

கிழக்குத் தெருவுல ஒரு காலேஜு...

நாட்டாமை அடுக்க அடுக்க ஊர் ஜனங்கள் கைதட்டி ஆரவாரித்தனர். எழுந்த விசில் அலையில் சிவன் கோயில் வாசல் பந்தல் ஒருமுறை பறந்து அமர்ந்தது.

“ ஊருக்கு கொட்டாயி கொண்டாந்த நாட்டாமை” ஒரு மேற்குத் தெரு இளசு கத்த

“வாழ்க”

எழுந்த கோஷம் பறந்து கொண்டிருந்த காக்கை கூட்டத்தை பிரித்துப் போட்டது.

ஒவ்வொரு தெரு சார்ந்தும் கோஷம் எழுந்த அடங்க ஒரு மணி நேரம் ஆனது. ஒருவர் கோஷத்தை ஒருவர் வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பு தெரிந்தது.

அடங்கியதும் ஒருவர் கேட்டார்,

இவ்வளவையும் செய்வதா சொல்றீங்களே....

ஊருக்கே விருந்துன்னா 100 கிடா வேணும், 100 மூட்ட அரிசி வேணும், உப்பு, புளி, காரம், தேங்கா காய் கறி , 4000 இலை, எல்லோருக்கும் தண்ணி, சமைக்க பாத்திரம், ஆளுங்க, பரிமாற ஆளுங்க, எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட இடம் எல்லாத்துக்கும் என்ன ஏற்பாடு?

நாட்டாமைக்கு ஜிவ்வென்று சிவந்தது.

அதெல்லாம் நாங்க பார்த்துக்குவோம் உனக்கென்ன என்றார்கள் நாட்டாமையின் வலது கைகள்.

அடுத்த வாரம் கட்டறேன்னு சொன்ன ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் , காலேஜு, சினிமா, எல்லாத்துக்கும் அனுமதி வாங்கியாச்சா? இடம் ஆர்ஜிதம் செய்தாச்சா? கட்ட பணத்துக்கு என்ன ஏற்பாடு?

ஓ வென்று கத்தினார்கள் அவரது வலது கைகளும் இடது கைகளும்.

கை அமர்த்திய நாட்டாமை சொன்னார்....

பார்த்தீங்களா, ஊருக்கு நல்லது செய்யலாம்னு நினைச்சா இப்படி அபசகுனம் மாதிரி பேசறானுங்க. நல்லது செய்ய விட மாட்டானுங்க சாமி...

தலையில் அடித்துக் கொண்டார்.

அவங் கிடக்குறான் லூசு, நீங்க செய்யுங்க நாட்டாம என்றார் நடுத்தெரு காரியக்காரர். ரெண்டு வருஷத்துக்கு முன்னால் நடுத்தெருவுக்கு பள்ளிக்கூடம் கொண்டு வரேன்னு நாட்டாமை சொன்னதும் அது வராமல் போனதும் அவர் மறந்து போயிருந்தார்.

எதையும் மறந்து விடுவார்கள் என்பதும் அவ்வப்போது எதையாவது செய்வதாய் சொன்னாலே போதும் என்பதும் நாட்டாமைக்குத் தெரிந்தே இருந்தது.

பின்குறிப்பு 1,
........................
போதுமான இஞ்சின்களும், பெட்டிகளும், இயக்க போதுமான அளவில் ஊழியர்களும் இல்லாமல் அதற்கான ஏற்பாடுகளையும் செய்யாமல் புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ரயில்வே அமைச்சரும், அதை அம்பலப் படுத்திய தோழர் டி.கே. ரெங்கராஜனும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

பின் குறிப்பு 2,
.......................
இது மாதிரி லூசுங்களாலதான் தேசம் முழுசா விற்பனையாகமல் இந்த அளவுக்கேனும் மிச்சமிருக்கு.

4 comments:

  1. இந்த மாதிரி மறதி மன்னர்களின் வாக்கினால் ஜெயித்தவன் சொல்வான் ...மக்கள் அதி புத்திசாலிகள் ,அவர்களுக்கு தெரியும் எப்போது யாருக்கு வோட்டு போடவேண்டுமென்று !
    த ம 2

    ReplyDelete
  2. மக்களின் மறதி என்னும் பலவீனம்தான் அரசியல்வாதிகளின் பலம்
    தம 3

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மறப்பது ஜனங்களின் குணம்...

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...