லேபில்

Wednesday, July 30, 2014

ஒதுக்கீடா முதலீடா?

அடிப்படை அறிவியல் துறைகளுக்கு இந்திய அரசு போதுமான நிதி ஒதுக்குவதில்லை. எனவே ஆராய்ச்சி படிப்புகளின் தரத்தையும் வளர்ச்சியையும் மேம்படுத்த தனியார் கல்வி நிறுவனக்கள் முதலீடு செய்ய வரவேண்டும் என்றும் மாண்பமை கலாம் அவர்கள் ஷில்லாங் ஐ.ஐ.எம் மில் பேசியதாக 25.7.14 அன்றைய ஜனசக்தி சொல்கிறது.
போதுமான நிதியை ஒதுக்கச் சொல்லி போராடுங்கள். அது உங்கள் உரிமை என்று மாணவர்களைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும்.
அல்லது நானும் வருகிறேன் வாருங்கள் போராடலாம் என்று பொதுமக்களைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும்.
அல்லது குறைந்த பட்சம் போதுமான நிதியை ஒதுக்குங்கள் என்றாவது அரசுக்கு அறிவுரை சொல்லியிருக்க வேண்டும்.
எங்க ஊர்ல கட வச்சிருக்கவனெல்லாம் போதுமான அளவு முதலீடு பன்னல நல்ல முதலீடோடு வந்தா ஏகமா சுருட்டலாம் என்பது போல் அல்லவா இருக்கு உங்கள் கோரிக்கை.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023