Monday, July 28, 2014

நிலைத் தகவல் 61

தோழர் நம்மாழ்வார் இறந்த அன்று எழுதியது

இப்படி ஒரு துயரம் நடக்காது போயிருந்தால் இந்நேரம் நானும் சந்திரசேகரும் தோழர் நம்மாழ்வாரோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்திருப்போம். அவர் காக்கைக்காக ஒதுக்கியிருந்த நேரம் இது.

அவரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் என்னிடமிருந்தன. அவற்றில் ஒன்று,

“ இயற்கையை சூறையாடுபவனைக் கண்டால் அவன் பன்னாட்டு நிறுவனமாயினும், உள்நாட்டு முதலாளிகளாயினும் அவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறீர்கள். தொடர்ந்து அதற்காக குரலும் தருகிறீர்கள்.

இதே தளத்தில் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரி கட்சிகளைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளிகளோடு இணைந்து களமேகத் தவறிவிட்டோமே என்று எப்போதேனும் எண்ணியிருக்கிறீர்களா?”

இதற்கு பதில் சொல்ல அய்யா இல்லை.

இடது சாரித் தலைவர்களிடம் உரிமையோடு கேட்கிறேன்,

“ தோழர் நம்மாழ்வாரோடு தேவையான அளவு இணைந்து அல்லது இணைத்துக் கொண்டு செயலாற்றத் தவறியிருக்கிறோம் என்ற உணர்வு எழுகிறதா தோழர்களே?”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...