Friday, July 25, 2014

மாற்றல்ல

நோண்பிருந்த இஸ்லாமியத் தோழர்களின் வாயில் சப்பாத்தியைத் திணிப்பது என்பதுகேவலத்தின் உச்சம்.

அதுவும் அந்தக் காரியத்தை பாராளுமன்ற உறுப்பினர்களே செய்திருப்பது என்பது கேவலமானது மட்டுமல்ல கடுமையான தண்டனைக்கு உரியதுமான குற்றம்.

இதைவிட, இது இந்துக்களுக்கான இந்தியா, மற்றவர்கள் வெளியேறட்டுமென அவையிலேயே ஒரு உறுப்பினர்கத்திச் சொன்னது அசிங்கமானதும் ஆபத்தானதும் ஆகும்.

ஆனாலும் ஒன்றைச் சொல்கிறேன்,

இதைச் செய்த எந்த ஒரு ஒருவரையும் எந்த ஒரு இந்துவும் இந்துவாகவோ மனிதனாகவோ ஏற்கவில்லை.

இவர்கள் மதவெறியர்கள்கூட அல்ல , வெறியர்கள்.

இந்த வெறி அழித்தெறியப்பட வேண்டியது. அதேசமயம் அது இன்னொரு வெறிக்கு வாய்ப்பாகப் போய்விடக் கூடாது.

ஒரு தவறுக்கு இன்னொரு தவறு மாற்றாகாது. ஒரு மதவெறிக்கு இன்னொரு மதவெறியோ, ஒரு வெறிக்கு இன்னொரு வெறியோ ஒரு போதும் மாற்றாகாது.

பின்குறிப்பு:

அவையில் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த உறுப்பினரை கடிந்துகொண்டு மன்னிப்பு கேட்கவைத்த மாண்பமை வெங்கைய நாயுடு அவர்களுக்கு இந்த மண்ணை நேசிக்கிற ஒவ்வொரு மனிதனின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...