Wednesday, July 23, 2014

நிலைத் தகவல் 63

ஈராக்கில் நடக்கும் கலவரத்தில் 1800 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம்  ஒன்று தகர்த்து நொறுக்கப் பட்டிருக்கிறது.

உலகெங்கிலுமிருந்து ஏகத்திற்கும் கண்டனக் குரல்கள். மிகவும் நியாயமான குரல்கள். இறை நம்பிக்கை இல்லாத நாத்திகன் என்ற போதிலும் வழிபாட்டுத் தளங்களை சேதப் படுத்துவதில் எப்போதும் ஒரு துளியும் உடன்பாடு இல்லை நமக்கு. ஆகவே எனது கண்டனத்தையும் உரத்த குரலில் பதிவு செய்கிறேன்.

ஆனால் சில நண்பர்கள் பார்த்தாயா பார்த்தாயா இந்த முஸ்லீம்களே இப்படித்தான் என்கிற கணக்கில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்களுக்காக ஒன்றைப் பதிய வேண்டியிருக்கிறது.

ஏதோ இஸ்லாமியர்கள் மதச் சகிப்புத் தன்மையே இல்லாதவர்கள். அவர்களது மண்ணில் பிற மதத்தவரின் வழி பாட்டுத் தளங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்றெல்லாம் ஒரு பிம்பத்தை கட்டமைத்து வைக்கப் பட்டுள்ளதே தவிர உண்மை அதுவல்ல.

1800 ஆண்டு பழமை வாய்ந்த தேவாலயத்தை இடித்துவிட்டார்கள் என்ற பதட்டத்தினூடே நாம் புரிந்து கொள்ள வேண்டியது அதை செய்தவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள்தானே தவிர இஸ்லாமியர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவனை இஸ்லாமியத் தீவிரவாதி என்றழைப்பதும் தவறு.

அந்த தேவாலத்தை இடித்தவர்கள் தீவிரவாதிகள்.

நம் ஊரிலும் 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப் பட்டது. அதையும் இந்துத் தீவிரவாதி இடிக்கவில்லை.

அதை இடித்ததும் தீவிரவாதிகள்.

இன்னொன்று,

400 ஆண்டுகளாக பாபர் மசூதியை அக்கறையோடு பாதுகாத்து பராமரித்தவர்களில் இந்துக்களும் அநேகம்பேர்.

1800 ஆண்டுகளாக அந்த தேவாலயத்தை அக்கறையோடு பாதுகாத்தவர்களில் அநேகம் பேர் முஸ்லீம்கள்.

இதுதான் நாம் உலகெங்கும் விதைக்க வேண்டிய செய்தி.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...