Sunday, July 6, 2014

நிலைத் தகவல் 49

எந்த ஒரு வேலைக்கும் குறைந்த பட்ச தகுதி என்று ஒன்று உண்டு.

தனது தகுதியை தவறாகக் குறிப்பிட்டோ அல்லது போலிச் சான்றுகளைத் தயாரித்தளித்தோ ஒரு வேலைக்கு வருவது என்பது கிரிமினல் குற்றம்.

ஒரு இளநிலை உதவியாளர் இப்படி ஒரு காரியத்தை செய்து அந்த வேலைக்கு வந்திருப்பார் என்பதற்கான முகாந்திரம் கிடைக்கும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார். அந்த வழக்கு முடிந்து அவர் நிரபராதி என்று தன்னை நிரூபித்துக் கொள்ளும் வரை பணியிடை நீக்கமும் தவறும் பட்சத்தில் சிறைத்தண்டனையும் நிரந்தரப் பணியிழப்பும் வந்து சேறும்.

இந்தக் காரியத்தை செய்திருப்பவரொரு மதிப்புமிக்க பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்.

பல்கழைக் கழகத்தில் இவர் செய்த ஊழல், அத்துமீறல், ஊழியர்களை பலி வாங்கியது, மாணவர்களை நசுக்கியது போன்றவற்றை விடுங்கள், கல்யாணி அவர்கள் அவர் கொடுத்த அவர் தகுதி குறித்த பொய்யான விவரத்திற்காகவே கைது செய்யப்பட வேண்டியவர்.

பணிநீக்கமே சாத்தியமில்லாதபோது நீதியாவது கைதாவது ?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...