Wednesday, July 2, 2014

நிலைத் தகவல் 47

இரண்டு விஷயங்கள் என்னை நெகிழ்த்திப் போட்டன இன்று.

ஒன்றை தோழர் Shah Jahan தந்திருந்தார். இன்னொன்றை எங்கள் மாவட்ட ஆட்சியர் செய்திருந்தார்.

ஷாஜி பகிர்ந்திருந்தது தனக்கும் மருத்துவர் அசோகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறித்த M.m.அப்துல்லா அவர்களின் பதிவின் சாரம்.

மூளைச் சாவு அடைந்திருந்த தனது மகனின் உறுப்புகளை தானமளித்து உயிர்களைக் காப்பாற்றிய ஈர மனிதர் மருத்துவர் அசோகன்.

அவர் இறந்து போன தனது உறவினரின் கண்களைத் தானமாகப் பெற்று மருத்துவ மனைக்கு அனுப்ப, அவை அன்றே பயன்படுத்தப் பட இறந்தவரின் சடலம் புதைக்கப் படும் முன்பே இருவருக்கு பார்வை கிடைத்ததைப் பற்றிய அப்துல்லாவினுடைய உரையாடலைத்தான் ஷாஜி தந்திருந்தார்.

அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அன்று பார்த்து மழை. குழி தோண்ட சாக்கடை நீர் ஊற்றெடுக்கிறது. வேறு வழியின்றி சாக்கடை நீருக்குள்ளேயே புதைக்கிறார்கள். அப்போது மருத்துவர் சொன்னாராம்,

“ நல்ல வேளை அவரது கண்களை இந்த சாக்கடை நீரிலிருந்து காப்பாற்றி விட்டேன்”

#

பெரம்பலூருக்கு அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகளை அனுப்பி அந்தச் சிறுவர்களை மீட்டு உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் எங்கள் மாவட்ட ஆட்சியர் தரேஷ்.

“ பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் கிழவி

பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் படி என்கிறாள்.

பிச்சையிலிருந்து மீட்டெடுத்து படிக்க வாய்ப்பளித்திருக்கிறார் தரேஷ்.

#

1. நல்லதைப் பகிர்ந்த ஷாஜஹான்
2. அப்துல்லா
3. மருத்துவர். அசோகன்
4. மாவட்ட ஆட்சியர் தரேஷ்

#

நாலு பேருக்கும் நன்றி.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...