Friday, August 1, 2014

உசிரையாவது....

முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்குமேயான அரசு தங்களது அரசு என்பதை நி்ருவ இவர்களுக்கு 100 நாட்கள்கூட தேவைப்படவில்லை.

ஏழைகளும் நடுத்தர மக்களும் பயணிக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஒன்று எடுக்கப் பட்டு அதற்குப் பதிலாக மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப் படும் என்று ரயில்வே திட்டமிட்டுள்ளதாக இன்றைய தினகரன் செய்தி சொல்கிறது

பணக்காரர்கள் காத்துக் கிடக்க ஏழைகளுக்கு ரயில் பயணம் ஒரு கேடா? நடந்து போங்கள் பித்துக்குளிகளா என்றிருக்கிறார்கள்.

ஏழைகளுக்கான ரயில் பெட்டி இன்று....

மருத்துவம் நாளை....

கல்வி நாளை மறுநாள்....

எல்லாம் ஒவ்வொன்றாய் பிடுங்கப் படும்....

அரசைப் பற்றி விமர்சிக்க ஆறு மாதமேனும் அவகாசம் கொடுங்கள் என்றவர்களிடம் ஒரு கேள்வி,

ஆறுமாதம் கழித்து உங்களது அரசை விமர்சிக்கவேனும் அதுவரை ஏழைகளின் உயிரையாவது விட்டு வைத்திருப்பீர்களா?

6 comments:

  1. strong majority govt can impose any thing as per it's wish!!!!

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழர். அருள்கூர்ந்து பெயரோடு வாருங்கள்

      Delete
  2. வணக்கம்
    சபாஷ் சரியாக சொன்னீங்கள் பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வோட்டு கேட்டு வரும் போது ஒரு பேச்சு
    ஜெயிச்ச பிறகு சொன்னதெல்லாம் போச்சு !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...