Tuesday, August 12, 2014

காக்கை ---- இரண்டு கோரிக்கைகள்

                                                                         1

காக்கைச் சிறகினிலே வாசகர்களிடம் உரிமையோடு ஒரு வேண்டுகோளை வைப்பது அவசியம்.

தோழர்களே,

இந்த இதழ் எங்களது தவத்தின் விளைவு.

ஒவ்வொரு மாதக் கடைசியிலும் மரணித்து அடுத்த மாதம் 5 ஆம் தேதி வாக்கில் உயிர்த்தெழுகிறோம். உயிர்த்தெழுவதற்காகவே மரணிக்கிறோம்.

காக்கை நீண்டு பயணிக்க நல்ல படைப்புகளும் சந்தாவும் அவசியம்.

ஒவ்வொருவரும் தத்தமது மாவட்டத்திலுள்ள படைப்பாளிகளை காக்கைக்கும், காக்கையை அவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.

உங்கள் மாவட்டத்திலிருந்து ஒரு பத்து சந்தாக்களையாவது சேகரித்து உதவுங்கள்.

மாவட்டம் மாவட்டமாக வாசகர் கூட்டம் நடத்த ஆசை.

எங்கிருந்து தொடங்கலாம்?


                                                                            2

தோழர்களே,

நேற்று “காக்கைச் சிறகினிலே” இதழுக்காக அணுகியிருந்தேன்.நிறைய நண்பர்கள் விளக்கம் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கான விவரங்கள் கீழே ஒவ்வொன்றாய்...

அதற்கிடையில் சில இனிப்பான செய்திகள். வாசகர் கூட்டங்களை நடத்த இயலுமா என்று கேட்டிருந்தேன்.

ஏற்கனவே என்னிடம் ஆகஸ்ட் 17 நாளினை வாங்கியிருந்த இரா. பூபாலன் அதை காக்கை அறிமுகத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார். அவருக்கும் அம்சப் பிரியாவிற்கும் நன்றி.

தோழர் Mani Rathnam திருநெல்வேலியில் ஏற்பாடு செய்ய முயல்வதாக சொல்லியுள்ளார். இயலுமெனில் திருநெல்வேலி தோழர்கள் அவரைத் தொடர்பு கொள்ளவும். அவரது தொடர்பெண் 9788096216

தோழர் Madurai Saravanan மதுரையில் நடத்தலாம் என்று சொல்லியுள்ளார்

பெரம்பலூர் குறித்து தோழர் ப. செல்வகுமார் என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும்.

இவை எல்லாம் சாத்தியப் பட்டால் காக்கைச் சிறகினிலே விரிந்து பறக்கும்.

எல்லா ஊர்களிலும் பாரதி புத்தகாலயம் மற்றும் என்.சி.பி.ஹெச் இல் கிடைக்கும்.

ஆண்டு சந்தா 275 ரூபாய்

மேலதிக விவரங்களுக்கு தோழர் முத்தையாவைத் தொடர்பு கொள்ளுங்கள்.அவரது எண் 9841457503

முகவரி

காக்கை
288, டசக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி
சென்னை 600005

எதற்கும் எனது எண் 9842459759

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...