Wednesday, August 6, 2014

வன்கிர்க்

ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்ட தினம் இன்று








தியோடர் வன்கிர்க் தனது 93 வது வயதில் சென்ற வாரம் காலமானார்.

அது சரி, யார் இந்த தியோடர் வன்கிர்க்?

இரண்டாம் உலகப் போரின் நாயகன் என்று தியோடர் வன்கிர்க்கை அழைப்பார்கள். நெதர்லாந்தில் பிறந்த அவர் பிறகு அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அமெரிக்க ராணுவத்தில் விமானியாகப் பொறுப்பேற்றார்.

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அரசு அவரை “ எனோலா கே “ (enola gay ) என்ற இருபத்தி நான்குபேர் கொண்ட விமானக் குழுவில் ஒருவராக நியமித்தது.

”லிட்டில் பாய்” என்ற அந்தக் கொடூரமான அணுகுண்டை ஹிரோஷிமாவில் அவர்தான் வீசினார். அதன் விளைவாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

அவர்தான் இப்போது மரணமடைந்திருக்கிறார்.

சற்றேரக் குறைய இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேரை பழிவாங்கிய, இன்றுவரை சபிக்கப் பட்டப் பகுதியாகவே அதை மாற்றிப் போட்டதைப் பற்றி அவர் எள்ளளவும் வருத்தப் பட்டதில்லை. மாறாக இரண்டாம் உலகப் போர் முடிவு பெற தான் ஒரு கருவியாக இருந்ததற்காக மகிழ்ச்சியோடே இருந்தார் என்று அவரது மகன் தோம் வன்கிர்க் தெரிவித்ததாக 31.07. 2014 ஜனசக்தி சொல்கிறது.

அவர் அணுகுண்டு வீசியதை விடவும் அதை அவர் நியாயப் படுத்திப் பேசியது கொடூரத்தின் உச்சம்

2 comments:

  1. பீடு சமயத்தில் பெரும் கேடு ..
    முகநூலில் பகிர்ந்திருக்கிறேன் https://www.facebook.com/malartharu

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...