Tuesday, August 5, 2014

நிலைத் தகவல் 62

தில்லியைச் சேர்ந்த நடத்துனர் ஒருவர் 15 பைசாவிற்கு தரவேண்டிய பயணச்சீட்டிற்கு பதிலாக 10 பைசா பயணச்சிட்டு கொடுத்தமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டு அந்த வழக்கு ஏறத்தாழ 40 வருடங்களுக்கும் மேல் நடந்துள்ளதாக போன வாரம் பத்திரிக்கைகளில் பார்க்க முடிந்தது.

அரசுக்கு 5 பைசா இழப்பு ஏற்படுத்திருக்கிறார் எனவே ஓய்வூதியப் பலன்கள்கூட அவருக்கு வழங்க இயலாது என்று தில்லி அரசு போக்குவரத்துக் கழகம் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

மாண்பமை அருண் ஜேட்லியோ தினம் தினம் 200 ரூபாய் சம்பாரிக்கும் செல்வந்தன் மானிய விலையில் சமையல் எரிவாயு வாங்குவது எப்படி சரியாகும். அரசுக்கு இழப்பல்லவா? என்கிறார்.

இப்படி மானிய விலையில் எரிவாயு வாங்குவது தேசத் துரோகமென்றும். அதை விடுத்து தேசப் பற்றாளர்களாக மாறுமாறும் சித்தாள்களுக்கும் தள்ளு வண்டி வியாபாரிகளுக்கும் எங்கிருந்தோ அசிரீரி குறுஞ்செய்திகள் வருகின்றன.

தேவையற்ற செலவுகளில் இருந்து அரசைக் காப்பாற்றும் தேச பக்தர்களைப் பார்த்து நெசத்துக்குமே புல்லரிக்கத்தான் செய்கிறது.

2007 ஆம் ஆண்டு தொலை தூரத்தில் உள்ள 27 மாநிலங்களைச் சார்ந்த 500 மாவட்டங்களுக்கு தொலை தொடர்பு இணைப்பு கொடுக்கும் திட்டம் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டது.

இதில் நடந்த முறை கேடுகள் கண்டு பிடிக்கப் பட்டு அந்த 14 நிறுவனங்களுக்கும் 600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. 600 கோடியிலிருந்து அபராதமானது 5 கோடிக்கு இறங்கிவிட்டதாகவும் இந்த வகையில் அரசுக்கு 595 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) கூறியுள்ளார் என்ற தகவல் இன்றைய (03.08.2014) தீக்கதிரில் கிடைக்கிறது.

மாண்பமை ஜேட்லி அவர்களுக்கு இந்தத் தகவலை ஃபார்வர்ட் செய்கிறேன்.

இது கண்டுபிடிக்கப் பட்டால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் பிரச்சினை.

ஆனாலும் செய்யமாட்டார். காரணம் அந்த நிறுவனங்கள் காங்கிரசுக்கும் வேண்டியவர்கள், இவர்களுக்கும் வேண்டியவர்கள்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...