Saturday, August 9, 2014

குட்டிப் பதிவு 3

சராசரியாக வருடத்திற்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அவர்களில் பெரும்பான்மையோர் பெண் குழந்தைகள் என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக இன்றைய BETAவிகடன் செய்திகள் சொல்கிறது.

இப்பிரச்னையில் அரசு அக்கறையற்று இருப்பதாக கடுமையாக சாடியதோடு, காணாமல் போகும் குழந்தைகள் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றும் உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.

என்ன சொல்லுங்கள், பல நேரங்களில் உச்சநீதி மன்றம் நல்ல எதிர்க் கட்சியாக செயல்படுகிறது. அது வீசிய ஒரு கேள்வியின் சூடு நெஞ்சைக் கிழிக்கிறது

”காணாமல் போகும் குழந்தைகள் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...