முற்றாய் முடிந்ததும்
போர்த்தினார்களா?
முடிந்துவிடுமென்று
போர்த்தினார்களா?
போர்த்தபட்ட வேட்டி தாண்டி
கசிந்து கொண்டிருந்தது.
“யாரு பெத்தப் புள்ளையோ”
வெடித்தாள்
முன்னிருக்கை தாயொருத்தி
“எங்க போயிட்டிருந்தானோ”
புலம்புகிறாள்
இன்னொமொரு தாயொருத்தி
“இப்படி
செத்துக் கிடக்கிறான்னு
ஊட்டுல
யாருக்குத் தெரியும்?”
புலம்பிய
தாயொருத்தியிடம் கேட்கிறாள்
குட்டி மகள்
“அந்த மாமா செத்தது
அந்த மாமாவுக்கு தெரியுமா
மொதல்ல”
ஆமாம்
தான் செத்ததறிவானா
செத்தவன்?
விஞ்ஞானமும்
மெய்ஞானமும்
மழலையில்
பத்திக் கொள்ள
குதித்தோடுகிறான்
பேருந்து நிற்கும் வரை
நேரமற்று
போகிற
பேருந்தைப்
பிடிக்க
போர்த்தினார்களா?
முடிந்துவிடுமென்று
போர்த்தினார்களா?
போர்த்தபட்ட வேட்டி தாண்டி
கசிந்து கொண்டிருந்தது.
“யாரு பெத்தப் புள்ளையோ”
வெடித்தாள்
முன்னிருக்கை தாயொருத்தி
“எங்க போயிட்டிருந்தானோ”
புலம்புகிறாள்
இன்னொமொரு தாயொருத்தி
“இப்படி
செத்துக் கிடக்கிறான்னு
ஊட்டுல
யாருக்குத் தெரியும்?”
புலம்பிய
தாயொருத்தியிடம் கேட்கிறாள்
குட்டி மகள்
“அந்த மாமா செத்தது
அந்த மாமாவுக்கு தெரியுமா
மொதல்ல”
ஆமாம்
தான் செத்ததறிவானா
செத்தவன்?
விஞ்ஞானமும்
மெய்ஞானமும்
மழலையில்
பத்திக் கொள்ள
குதித்தோடுகிறான்
பேருந்து நிற்கும் வரை
நேரமற்று
போகிற
பேருந்தைப்
பிடிக்க
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்